அரூரில் இயங்கி வரும் கிரெடிட் அக்சஸ் கிராமீன் லிமிடெட் நிதிநிறுவனம் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் நேற்று ஜமனஹள்ளியில் உள்ள அரசு அங்கன்வாடி பள்ளிக்கூடத்திற்கு குழந்தைகளுக்கான நற்காளி, போர்வை போன்ற பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் இதே போன்று நாச்சினாம்பட்டியில் உள்ள அங்கன்வாடி பள்ளிக்கும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் நிதிநிறுவன கிளை மேலாளர் திருமதி ஜெயந்தி இராமன் மற்றும் பகுதி மேலாளர் ரவிக்குமார் தலைமை தாங்க அரூர் குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் திருமதி தீர்த்தாம்மாள் அவர்கள் முன்னிலையில் ஊராட்சிமன்ற தலைவர், வார்டு உறுப்பினர்கள், அங்கன்வாடி ஆசிரியை, குழந்தைகள், பெற்றோர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக