பாலக்கோடு அருகே நேற்று நிகழ்ந்த விபத்து; முதல்வர் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 16 ஜூலை, 2024

பாலக்கோடு அருகே நேற்று நிகழ்ந்த விபத்து; முதல்வர் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவிப்பு.


தருமபுரி மாவட்டம்‌, பாலக்கோடு, ஜெர்த்தலாவ்‌ கிராமம்‌, பாரதியார்‌ நகர்‌ அருகில்‌ நிகழ்ந்த சாலை விபத்தில்‌ காயமடைந்தவர்களின்‌ குடும்பத்தினருக்கு ஆறுதல்‌ மற்றும்‌ நிதியுதவி - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ அறிவிப்பு.


தருமபுரி மாவட்டம்‌, பாலக்கோடு வட்டம்‌, ஜெர்த்தலாவ்‌ கிராமம்‌, பாரதியார்‌ நகர்‌ அருகில்‌ நேற்று (15.07.2024) மாலை சுமார்‌ 05.30 மணியளவில்‌ இரண்டுதனியார்‌ பேருந்துகள்‌ எதிர்பாராதவிதமாக நேருக்குநேர்‌ மோதிக்கொண்ட விபத்தில்‌ இரண்டு பேருந்துகளிலும்‌ பயணம்‌ செய்த 21 நபர்கள்‌ பலத்த காயமடைந்ததோடு இவ்விபத்தில்‌ மேலும்‌ பலர்‌ காயமடைந்தனர்‌ என்ற செய்தியினைக்‌ கேட்டு மிகவும்‌ வருத்தமும்‌ வேதனையும்‌ அடைந்தேன்‌.

இந்த விபத்தில்‌ காயமடைந்து தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்‌ சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்‌. இவ்விபத்தில்‌ காயமடைந்தவர்களின்‌ குடும்பத்தினருக்கும்‌ அவர்களது உறவினர்களுக்கும்‌ எனது ஆறுதலைத்‌ தெரிவித்துக்‌ கொள்வதோடு, பலத்த காயமடைந்து மருத்துவமனையில்‌ சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம்‌ ரூபாயும்‌, இலேசான காயமடைந்து மருத்துவமனையில்‌ சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம்‌ ரூபாயும்‌ முதலமைச்சரின்‌ பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும்‌ உத்தரவிட்டுள்ளேன்‌, என தனது செய்தியரிகையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad