இக்கூட்டத்திற்க்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன்ஜேசுபாதம், கோட்டாட்சியர் காயத்திரி, மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லிராஜ்குமார், சார்ஆட்சியர் கெளரவ்குமார், துணைஆட்சியர் தனப்பிரியா, மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் பாலக்கோடு வட்டத்தில் ஆய்வு செய்யப்பட்ட திட்டப்பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பள்ளி கட்டிடங்களின் உறுதிதன்மை, சாலை பணிகள், மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகள், கிராமங்களில் வழங்கப்பட்டு வரும் குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம், வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமாங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து பாலக்கோடு வட்டத்தில் செயல்பட்டு வரும் ஒன்பது மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 71 இலட்சம் ரூபாய் கடனுதவிக்கான காசோலையை வழங்கினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன், ரேனுகா, டி.எஸ்.பி. சிந்து, முதன்மை கல்வி அலுவலர் ஜெயசந்திரா, தாசில்தார் ரஜினி, இன்ஸ்பெக்டர் பாலசுந்தர், மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக