புதிய பாரத எழுத்தறிவு திட்டம் அக்ரஹாரம் கிராமத்தில் தொடக்கம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 16 ஜூலை, 2024

புதிய பாரத எழுத்தறிவு திட்டம் அக்ரஹாரம் கிராமத்தில் தொடக்கம்.


தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட E.அக்ரஹாரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்  புதிய பாரத எழுத்தறிவு திட்டம்  தொடங்கப்பட்டது, இதில் 30- க்கு  மேற்பட்ட ஊர் பொதுமக்கள்  இதில் கலந்து  கொண்டனர்.


இத்திட்டத்தை குறித்து   பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்கள்  அவர்கள் கல்வி கற்றுக்கொள்ள வயது தேவை இல்லை கையெழுத்து எழுதி பழகவும், பேருந்தில் பயணம் செய்யும்போது பயண சீட்டு அறிந்து கொள்ளவும், வங்கி சீட்டு  கணக்கில் இருப்பு பற்றி அறிந்து கொள்ளவும், கல்வி எவ்வளவு முக்கியம் என்பது பற்றி விளக்கமாக கூறினார்கள்.


இந்நிகழ்ச்சியில் ஆதிமூலம்  (தலைமை ஆசிரியர்), மற்றும் உதவி ஆசிரியர்கள்  சுரேஷ்பாபு, சக்திவேல், சரிதா, சசி, சந்திரலேகா, நா. சின்னமணி (தன்னார்வலர்), மற்றும் ஊர் பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

Post Top Ad