பூகானஅள்ளி ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் குறித்து சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 2 ஜூலை, 2024

பூகானஅள்ளி ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் குறித்து சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.


தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த  பூகானஅள்ளி  ஊராட்சி எண்டப்பட்டி கிராமத்தில் தலைவர் என்.முருகன் தலைமையில் கலைஞரின் கனவு இல்லம் குறித்து சிறப்பு கிராம சபை கூட்டம்  நடைப்பெற்றது. இதில் பஞ்சாயத்து கிளார்க் பச்சையப்பன் பாடி கிளைக்கு (அ) சாம்ராஜ் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் வரவு - செலவு அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டது.


பூகான அள்ளி ஊராட்சி கிராமங்களிள் நடைப்பெற்றுவரும் பணிகளை குறித்து எடுத்துரைத்தனர். மேலும் கலைஞரின் கனவு இல்லம்  பூதிப்பட்டி, ஆச்சாரஅள்ளி, பூகானஅள்ளி, எரப்பட்டி, எண்டப்பட்டி ,கீழ் எண்டப்பட்டி, ஆகிய கிராமத்தில் மொத்தம் 16 நபர்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் வழங்கும் பயனாளிகளின் பெயர்களை எடுத்துரைத்தனர்.  


இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு ஒன்றிய பணி மேற்பார்வையாளர் மலர்விழி, மக்கள் நல பணியாளர் பெருமாள்.துணை தலைவர் பிரபு, வார்டு உறுப்பினர்கள்  தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலைஞரின் கனவு இல்லம் கிராம சபை கூட்டத்தில்  கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad