தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த ராமாபுரம் கிராமத்தை சேர்ந்த வேடியப்பன் (வயது. 55) இவர் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பேக்கரியில் மாஸ்டராக பணியாற்றி வந்தார். நேற்று 26ம் தேதி மாலை வேலை முடிந்து தனது மொபட்டில் காரிமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
காரிமங்கலம் அடுத்த கோடாளம்மன் கோயில் முன்பு வந்து கொண்டிருந்த போது வேகதடையில் நிலைதடுமாறி மொபட்டில் இருந்து கீழே விழுந்தார். இதில் வேடியப்பனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவ்வழியாக சென்றவர்கள் இவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தீவீர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு 11 மணிக்கு வேடியப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்த காரிமங்கலம் போலீசார் விபத்து குறித்து இன்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக