பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு தாசில்தாரை கண்டித்து இந்திய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 15 ஜூலை, 2024

பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு தாசில்தாரை கண்டித்து இந்திய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு தாசில்தார் ஆறுமுகத்தை கண்டித்து இந்திய மார்க்கிஸ்ட்  கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் முன்னாள் எம்.எல்.ஏ டில்லிபாபு தலைமையில் நடைப்பெற்றது.


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்க்கு மாவட்ட செயற்குழு உறுப்பிணர் நாகராசன், வட்டக்குழு உறுப்பிணர்கள் கோவிந்தசாமி, நக்கீரன், காரல் மார்க்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பஞ்சப்பள்ளி ஊராட்சி பெரியானூர் கிராமத்தில் அரசு நிலத்தை வீடு இல்லாத ஏழைகளுக்கு வழங்காமல், வசதி படைத்தவர்களுக்கு பட்டா வழங்குவதையும், அதே பகுதியில் 60 ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் சின்னபையன் என்பவரின் நிலத்தை அபகரிக்காதே என கோரியும் தாசில்தாரை கண்டித்தும் கோஷமிட்டும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில். இந்திய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ராஜா, சக்திவேல், கோவிந்தராஜ், ஆறுமுகம், சேகர், பாண்டியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad