ஜெர்தலாவ் ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊரக குடியிருப்பு பழுது பார்க்கும் திட்டம் குறித்து சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 2 ஜூலை, 2024

ஜெர்தலாவ் ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊரக குடியிருப்பு பழுது பார்க்கும் திட்டம் குறித்து சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியத்திற்க்கு உட்பட்ட ஜெர்தலாவ், பி.செட்டி அள்ளி, பேளாரஅள்ளி  ஊராட்சிகளில்  கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊரக குடியிருப்பு பழுது பார்க்கும் திட்டம் குறித்து சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துமணி ஆனந்தன்,  கணபதி, ராதா மாரியப்பன் ஆகியோரின் தலைமையில் நடந்தது.


ஊரக வளர்ச்சி  தணிக்கை உதவி இயக்குநர் நாகராஜ், மற்றும் மண்டல அலுவலர்கள் முன்னிலையில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் 2024-25 ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ் வீடு வழங்குவதற்காக  பயனாளிகளை தேர்ந்தெடுத்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் ஏற்கனவே கட்டப்பட்டு பழுதான ஓட்டு வீடுகள் மற்றும் சாய்தள கான்கிரீட் கூரை வீடுககளை சீரமைக்க பயனாளிகளை தேர்ந்தெடுத்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.


இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற செயலாளர்கள் சஞ்சீவன், கோவிந்தன் முருகேசன் மற்றும் வார்டு உறுப்பிணர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad