தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள அருள்மிகு ஆறுபடை சக்திவேல் முருகன் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகுவிமர்சையாக நடைப்பெற்றது.
இவ்விழாவானது நேற்று 30ம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. முக்கிய நாளான இன்று அதிகாலை முதலே புனித நீர் வழிபாடு, பிள்ளையார் வழிபாடு, எண்வகை மருந்து சாற்றுதல், நடைப்பெற்றது, அதனை தொடர்ந்து,
கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்ச சூக்தஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்திஹோமம், வேதபாராயணம், பூர்ணாஹதி நடைப்பெற்றது. இதையடுத்து யாகசாலையிலிருந்து புனிதநீர் கலச தீர்த்த குடத்தை கோவில் முக்கிய நிர்வாகிகள் தங்கள் தலைமீது எடுத்து சென்று கோயில் கோபுர உச்சியில் உள்ள கலசத்திற்கு புனித நீர் ஊற்றி திருக்குட நன்னீராட்டு செய்து தீபாரதனை காட்டினார். பின்னர் கலசத்திற்கு ஊற்றிய புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
இதனையடுத்து விக்ரகத்திற்க்கு பல்வேறு திரவியங்கள், பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. ஆறுபடை சக்திவேல்முருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தவிழாவையொட்டி பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், மற்றும் விழாகுழுவினர், செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக