அரூர் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்வு திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 13 ஜூலை, 2024

அரூர் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்வு திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


மக்களுடன் முதல்வர் என்னும் நிகழ்ச்சி தருமபுரி மாவட்டம் பாளையம் புதூரில் நடைபெற்றது இதில் தமிழக முதல்வர் பங்கேற்று  அரூர் சிறப்பு நிலை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார், இதை வரவேற்கும் விதமாக அரூர் கச்சேரிமேட்டில் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் தலைமையில் திமுகவினர் பட்டாசுகள் வெடி்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர் முன்னதாக அங்குள்ள அறிஞர்அண்ணா டாக்டர் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


இந்நிகழ்ச்சியில் விசிக மாவட்ட செயலாளர் சி.கே. சாக்கன்சர்மா சிபிஎம் மாவட்ட செயலாளர் ஏ.குமார் முன்னாள் எம்எல்ஏ ஆர்.வேடம்மாள் பேரூராட்சி தலைவர் இந்திராணிதனபால் துணை தலைவர் சூர்யாதனபால் நகர செயலிளர் முல்லைரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad