பெரியாம்பட்டியில், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல் மற்றும் அபராதம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 16 ஜூலை, 2024

பெரியாம்பட்டியில், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல் மற்றும் அபராதம்.


தர்மபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில், உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல்துறை  இணைந்து குழுக்கள் அமைத்து தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 


உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ்., மற்றும் பாலக்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் சிந்து  , காரிமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.பாலகிருஷ்ணன் அவர்கள் தீவிர சோதனை நடவடிக்கை மேற்கொள்ள உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் காரிமங்கல காவல் நிலைய உதவி ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டதன் அடிப்படையில்,   காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் காரிமங்கலம் காவல் நிலைய சிறப்பு நிலை காவல் உதவி ஆய்வாளர்கள் திரு. யுயல்மூர்த்தி, தங்கராஜ்  உள்ளிட்ட குழுவினர் காரிமங்கலம் மற்றும் பெரியாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகை,பீடா கடைகளில் ஆய்வு செய்தனர். ஆய்வில் பெரியாம்பட்டி, காமராஜர் நகரில் பேருந்து நிறுத்தம் அருகில் ஒரு பேன்சி ஸ்டோர் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கண்டெடுத்து பறிமுதல் செய்யப்பட்டது. 


அதன் பின்னர் காரிமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி அவர்கள் முதல் தகவல் அறிக்கை பதிந்து மேல் நடவடிக்கைக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு பரிந்துரை செய்ததன் அடிப்படையில்,  உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ்., அவர்கள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த பேன்சி ஸ்டோர் கடை இயங்க தடை விதித்து, உடனடி அபராதம்  ரூபாய்.25000 விதித்து  உத்தரவிட்டார். 


அதனை  காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், காரிமங்கலம் காவல் நிலைய சிறப்பு நிலை உதவி ஆய்வாளர்  யுயல்மூர்த்தி ஆகியோர் இணைந்து  நேரில் நோட்டீஸ் வழங்கி அபராதம் செலுத்திடவும்,  மறு உத்தரவு வரும் வரை கடை திறக்கக் கூடாது என எச்சரித்து கடையை மூடி விட்டு சென்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad