காமராஜர் பிறந்தநாளில் ஏழை பெற்றோரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய பிஜிஆர் மருத்துவர் ராஜேஷ், இது குறித்து மை தருமபுரி அமைப்பின் தலைவர் கூறுகையில், கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக தமிழகம் முழுவதும் ஜூலை 15 கொண்டாடி வருகிறோம். இந்த நாளில் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து பல கல்வி சேவை திட்டங்களை பலரும் செய்து வருகின்றனர். இந்த நன்னாளில் பிஜிஆர் மருத்துவமனை மருத்துவர் ராஜேஷ் அவர்கள் தனியார் கல்லூரியில் இயற்பியல் துறையில் படித்து வரும் இரண்டு மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார்.
ஒருவரின் வாழ்க்கை வளர்ச்சிக்கு முக்கியமான ஒன்று கல்வி அந்த கல்வியை அனைவருக்கும் வழங்குவோம் கல்விக்கண் திறந்த காமராஜர் அவர்களை போற்றுவோம், என கூறினார், கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வில் மை தருமபுரி சதீஸ் குமார் ராஜா, தமிழ்செல்வன், அருணாசலம் ஆகியோர் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக