பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 2 ஜூலை, 2024

பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை  ஆர்ப்பாட்டம் மாவட்ட துணைத்   தலைவர் குணசேகரன் தலைமையில்  நடந்தது. 

  

இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும், முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவு படுத்த வேண்டும் சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும், கருணை அடிப்படையிலான பணியிடங்களை 5சதவீதமாக குறைக்கப்பட்டதை கைவிட வேண்டும், ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 25 சதவீத பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும், ஒப்பந்த பணியாளர் முறையை கைவிடு, சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்கிடு, மாநகராட்சி, பேரூராட்சி ஊழியர்களுக்கு கருவூலம் மூலமாக சம்பளம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.


இந்த கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில்  வட்ட கிளை தலைவர் தமிழ்செல்வன், வட்ட செயலாளர் மாணிக்கம், முன்னாள் மாவட்ட செயலாளர் சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசன், துணை தாசில்தார்கள் எழில்,  ஜெகதீசன்   மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad