கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் தருமபுரி வழியாக சென்ற பாசஞ்சர் ரயிலில் பெயர் விலாசம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க முதியவர் மயக்க நிலையில் இருந்துள்ளார், சக பயணிகள் அளித்த தகவலின் பேரில் தருமபுரி இருப்பு பாதை போலீசார் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சில நாட்களில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், உயிரிழந்த முதியவர் குறித்து விசாரித்ததில் அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்பது தெரியவந்தது, எனவே மை தருமபுரி தன்னார்வலர்கள் மூலம் இன்று தருமபுரி இருப்புப் பாதை காவலர், மை தருமபுரி அமரர் சேவை தமிழ்செல்வன், சண்முகம் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 97 ஆதரவற்று இறந்த புனித உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக