பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து அரூரில் அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் பணியாளர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாபெறும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 12 ஜூலை, 2024

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து அரூரில் அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் பணியாளர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாபெறும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான செல்வ பெருந்தகையை அவதூறாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து  அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அரூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே மாநில செயலாளர் இம்ரான் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் அகமது வரவேற்றார் இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வ பெருந்தகையை  அவதூறாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன பின்னர் அவரது உருவ படத்தை கிழித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர், இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் வைரவன்  வட்டார தலைவர் வஜ்ரம் வழக்கறிஞர் சந்திரசேகர் சிவலிங்கம், ராஜா மோகன் அருள்ஜோதி முருகன் ஜெயராமன் ஆறுமுகம் சர்பராஜ் நாகராஜ் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் மாவட்ட துணை தலைவர் ஏகேஎஸ் அக்பர் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad