தொகுப்பூதியத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 5 ஜூலை, 2024

தொகுப்பூதியத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு.


ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் துவக்கப்பள்ளிகளில் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கு 7- இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தருமபுரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் 1)அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளி, கண்ணம்பள்ளி (1 பணியிடம்) 2)அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளி, குள்ளாத்திரம்பட்டி புதூர் (1 பணியிடம்) 3) அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளி மாரியம்பட்டி (2 பணியிடம்), 4) அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளி மருதிப்பட்டி(1 பணியிடம்) 5) அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளி, மொண்டுகுழி (1 பணியிடம்) 6) அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளி, நெருப்பாண்டகுப்பம் (1 பணியிடம்) ஆகிய பள்ளிகளில் 2024 2025 ஆம் கல்வியாண்டில் கல்வி பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக்குழுவின் மூலம் நியமனம் செய்ய தகுதிபெற்ற நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு, ஆசிரியர் தகுதித்தேர்வு (TET PAPER 1) தேர்ச்சி பெற்ற நபர்கள் உரிய கல்வித் தகுதி சான்றுகளுடன் எழுத்து மூலமான விண்ணப்பங்களுடன் நேரடியாகவோ, அஞ்சல் மூலமாகவோ 08.07.2024-க்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், தருமபுரி- 636 705 என்ற முகவரிக்கு அனுப்பலாம் மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad