பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனை முன்பு போக்குவரத்து கழகங்களை பாதுகாக்க கோரி சி. ஐ.டி.யு சார்பில் ஆர்ப்பாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 26 ஜூலை, 2024

பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனை முன்பு போக்குவரத்து கழகங்களை பாதுகாக்க கோரி சி. ஐ.டி.யு சார்பில் ஆர்ப்பாட்டம்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனை முன்பு போக்குவரத்து கழகங்களை பாதுகாக்க கோரி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம், சி. ஐ.டி.யு சார்பில்  கிளை தலைவர் பசவராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


மத்திய இணை செயலாளர்கள்  மனோன்மணி, வெங்கடாசலபதி, பொது செயலாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அரசு போக்குவரத்து கழகங்களை அழிக்கும் வகையில் மினி பஸ்ஸை, அறிமுகப்படுத்துவதை கண்டித்தும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வு கால பணபலன்களை வழங்காததை கண்டித்தும், போக்குவரத்து கழகங்களை மேம்படுத்த அரசு நிதி வழங்க வேண்டும், காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை  கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad