தொடர்ந்து மூன்றாம் நாள் நிகழ்வில் பெரியார் பல்கலைக்கழக இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியியல் துறை தலைவர் முனைவர் நந்தகுமார் ' ஊடகத்துறையில் உள்ள வேலை வாய்ப்புகள்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் பெரியார் பல்கலைக்கழக புல முதன்மையரும பொருளியல் துறை தலைவருமான முனைவர் ஜெயராமன் 'தலைமை ஏற்க கற்றுக் கொள்ளுங்கள்' என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்.
முன்னதாக இந்நிகழ்வுக்கான துவக்க விழாவில் ஆராய்ச்சி மைய இயக்குனர் முனைவர் மோகனசுந்தரம் தலைமை உரையாற்றினார். ஆங்கிலத்துறை தலைவரும் பேராசிரியருமான முனைவர் கோவிந்தராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். இறுதியாக ஆங்கிலத்துறை உதவி பேராசிரியரும் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் கிருத்திகா நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வை இரண்டாம் ஆண்டு மாணவிகள் காவியா மற்றும் ஹாஜிரா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
இந்நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இரண்டாம் ஆண்டு மாணாக்கர்கள் கோகுல் விஜய் ஸ்ரீ மதுமிதா, முதலாம் ஆண்டு மாணாக்கர்கள் பிரசாந்த் தேன்மொழி மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணாக்கர்கள், கௌரவ விரிவுரையாளர்கள் முனைவர் சரண்யா மற்றும் மீனா ஆகியோர் செய்து இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக