அரூர் அடுத்த வேப்பநத்தம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பெருந்தலைவர் கர்மவீரர் காமராசர் அவர்களின் 122 வது பிறந்த நாள் விழா இன்று பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் திருமதி ஜெயந்தி இராமன் அவர்கள் தலைமயில் பள்ளி தலைமையாசிரியர் திருமதி கல்பனா அவர்கள் முன்னிலை வகிக்க ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.
மேலும் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் மற்றும் காமராசர் குறித்த கட்டுரை போட்டி பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு இறுதியில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக