காரிமங்கலம் பேருந்து நிலையத்தில் அனுமதியின்றி லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 29 ஜூலை, 2024

காரிமங்கலம் பேருந்து நிலையத்தில் அனுமதியின்றி லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது.


தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதி இன்றி சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்வதாக டி.எஸ்.பி சிந்து அவர்களுக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் காரிமங்கலம் போலீசார் காரிமங்கலம் கடைத்தெரு, மொரப்பூர்சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஜூலை.29, திங்கட்கிழமை, இன்று மாலை 6 மணிக்கு தீவிர சோதனை மேற்கொண்டனர்.


அப்போது பேருந்து நிலையத்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்ததில் கும்பாரஅள்ளியை சேர்ந்த செல்லன் (வயது.42) என்பதும் அனுமதி இன்றி லாட்டரி சீட்டு விற்றதும் தெரிய வந்தது, அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 400 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad