மருதம் நெல்லி கல்லூரியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 15 ஜூலை, 2024

மருதம் நெல்லி கல்லூரியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா.

மருதம் நெல்லி கல்விக் குழுமம், ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மருதம் நெல்லி தமிழ் இலக்கியப் பேரவை ஆகியவை இணைந்து பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.


நிகழ்விற்கு மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் கா.கோவிந்த் தலைமை வகித்தார். குழுமத்தின் செயலாளர் காயத்ரி கோவிந்த் முன்னிலை வகித்தார். ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் இல.சதீஷ் வரவேற்று பேசினார். ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சி.பரஞ்சோதி, மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் நா.மகேந்திரன் வாழ்த்துரை வழங்கினர். கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் நா.நாகராஜ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். நிகழ்வின் சிறப்பு விருந்தினராக இணைந்த கரங்கள் அமைப்பின் நிறுவனர் ஆசிரியர் சிலம்பரசன் மாணவர்களிடத்தில் சிறப்புரை வழங்கினார்.


காமராஜ் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கல்லூரியில் நடத்தப்பெற்ற பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியப்போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிறைவாக தமிழ்த்துறை முதலாம் ஆண்டு மாணவி மு.கவிப்பிரியா நன்றி கூறினார் ‌‌. நிகழ்வில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் என பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad