பாலக்கோடு அடுத்த திம்மம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து மீது மினிசரக்கு லாரி மோதியதில் இருவர் படுகாயம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 18 ஜூலை, 2024

பாலக்கோடு அடுத்த திம்மம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து மீது மினிசரக்கு லாரி மோதியதில் இருவர் படுகாயம்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு  அடுத்த வெள்ளிசந்தையில் இருந்து பாலக்கோடு நோக்கி அரசு டவுன் பஸ் நேற்று மாலை பாலக்கோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. 30 பயணிகளுடன் ஓட்டுநர் பழனிசாமி(வயது. 53) என்பவர் பேருந்தை ஓட்டி வந்தார். பாலக்கோடு அடுத்த திம்மம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த மினி சரக்கு லாரி பேருந்தின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.


இதில் பேருந்தில் பயணம் செய்த மாக்கன்கொட்டாயை சேர்ந்த முத்து (வயது.45) திம்மம்பட்டி கிராமத்தை சேர்ந்த லட்சுமி (வயது. 53) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இருவரையும் மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.


இதுகுறித்து  ஓட்டுநர் பழனிசாமி கொடுத்த புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad