தேர்தலை புறக்கணித்த ஜோதிஅள்ளி கிராம மக்களின் கோரிக்கையை மத்திய அமைச்சரிடம் வழங்கிய தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 25 ஜூலை, 2024

தேர்தலை புறக்கணித்த ஜோதிஅள்ளி கிராம மக்களின் கோரிக்கையை மத்திய அமைச்சரிடம் வழங்கிய தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி.


தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் திரு ஆ .மணி அவர்கள்  இன்று ஒன்றிய அரசின் மாண்புமிகு ரயில்வே துறை அமைச்சர் திரு.அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் ஜோதிஅள்ளி சுற்று வட்டார பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில்வே தரைப்பாலம் அமைத்து போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தருவது குறித்தும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கும்மனூரில் செயல்பட்டு வந்த ரயில் நிலையம் மூடப்பட்டதை மீண்டும் பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென்று கோரிக்கை மனுவினை வழங்கினார்.


கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜோதிஅள்ளி கிராமத்தில் இரயில்வே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால்  நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad