தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சியில் பி.டி.ஓ. அலுவலக வளாகம், கோர்ட் மற்றும் போலீஸ் ஸ்டேஷன் அமைந்துள்ள பகுதிகளில் சீரான முறையில் மின்சார விநியோகம் செய்திட மின்வாரியத் துறை சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் நீதிமன்ற வளாகம் பகுதியில் புதியதாக அமைக்கப்பட்ட 2 டிரான்ஸ்பார்மர்கள் திறப்பு விழா நிகழ்ச்சி செயற்பொறியாளர் வனிதா அவர்களின் தலைமையில் மாலை 3 மணிக்கு அளவில் நடந்தது.
நிகழச்சியில் செயற்பொறியாளர் வனிதா, டி.எஸ்.பி.சிந்து ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டிற்க்காக திறந்து வைத்தனர். நிகழ்ச்சிக்கு பாலக்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சிந்து, காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் உதவி பொறியாளர்கள் ரமேஷ், மாதேஷ், அருண்பிரசாத் பி.டி.ஒக்கள் கணேசன், நீலமேகம், மேலாளர் ராமச்சந்திரன், மின்வாரிய பணியாளர்கள் மாதன், முருகன், பிரகாசம், தேவேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக