காமராசர் பிறந்த தினத்தில் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 15 ஜூலை, 2024

காமராசர் பிறந்த தினத்தில் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.


பென்னாகரத்தை அடுத்துள்ள செங்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காமராசர் பிறந்த தினம் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.


இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மா. பழனி தலைமை வகித்து காமராசர் படத்துக்கு மாலை அணிவித்து ஆசிரியர்கள் மாணவர்கள் பொதுமக்கள் மரியாதை செலுத்தினார்கள். காமராசர் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒவ்வொரு கிராமங்களிலும் பள்ளிகள் இருக்க வேண்டும் எனவும் அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு பள்ளிக்கல்விக்கு முக்கியத்துவம் தந்ததால்தான் இன்று நாம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்திருக்கிறோம்.  


ஏழை குழந்தைகளின் பசியாற மதிய உணவு திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களையும் செயல்படுத்தி நாட்டில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர். மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்று பயனடைய வேண்டும் என கேட்டுக்கொண்டார். பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, பாடல் ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட்டது. கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு குழந்தைகளுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.


நிகழ்ச்சியில் வளர்மதி, பழனிச்செல்வி, கல்பனா, திலகவதி அனுப்பிரியா உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad