காரிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கேத்தனஅள்ளி ஊராட்சியில் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 15 ஜூலை, 2024

காரிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கேத்தனஅள்ளி ஊராட்சியில் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்.


பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் உள்ள கேத்தன அள்ளி  ஊராட்சியில் உள்ள ஆர்.சி பாத்திமா துவக்க பள்ளியில் முதலமைச்சரின்  காலை உணவு திட்டத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ஜான் பிரின்சிலி ராஜ்குமார் தொடங்கி வைத்து மாணவர்களுடைய அமர்ந்து காலை உணவை சாப்பிட்டார். 


இந்நிகழ்ச்சியில் மாவட்ட உதவி தொடக்க கல்வி அலுவலர் அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன், ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கோபால், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தீபா, முருகன், பள்ளியின் தாளாளர் புஷ்பராஜ், தலைமை ஆசிரியர் லாரன்ஸ், ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி, செந்தில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம், முனுசாமி கவுன்சிலர் ரமேஷ் தனகோட்டி சீனிவாசன் சவுரியப்பன் சேட்டு ஜான்பால் அண்ணாமலை அண்ணாதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் உட்பட ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad