தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மாதம்பட்டி கிராமத்தில் எம்.ஜி.ஆர் அரசு கலைக் கல்லூரி அருகேயுள்ள ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம், வெகு விமர்சையாக நடைப்பெற்றது.
அதனை தொடர்ந்து நடைப்பெற்ற சிறப்பு பூஜையில் முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் அவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார், முன்னதாக அவருக்கு கோயில் நிர்வாகிகள் ஜீவலிங்கம், சுஜி ஆகியோர் பூர்ணகும்ப மரியாதை செய்து வரவேற்பு அளித்தனர்.
அது சமயம் முன்னாள் அறங்காவலர் தலைவர் கே.வி.ரங்கநாதன் பாலக்கோடு ஒன்றிய குழு தலைவர் பாஞ்சாலை கோபால், வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கில் செந்தில், நகர செயலாளர் ராஜா, வீரமணி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக