காவிரியில் வெள்ளப்பெருக்கு எதிரொலி; சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 28 ஜூலை, 2024

காவிரியில் வெள்ளப்பெருக்கு எதிரொலி; சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு.


ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக  சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வர தடை விதிக்கப்பட்டுள்ளதால் மடம் சோதனை சாவடியில் காவல்துறையினர் மூலம் சுற்றுலா பயணிகள் வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.

கர்நாடகா கேரளா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் கர்நாடகா அணைகளில்  அதனுடைய முழு கொள்ளளவை எட்டி உள்ளன. இதனால் கர்நாடகா அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணர் ஆகிய இரு அணைகளிலிருந்தும் அதிகப்படியான உபரி நீர்  வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீர் வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


 கர்நாடகா அணைகளில் இருந்து நேற்று மாலை ஒரு லட்சத்து 43 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை நிலவரப்படி ஒரு லட்சத்து 66 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது இந்த நீர்வரத்து காரணமாக தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்த வண்ணம் உள்ளது இதனால் காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு ஒரு லட்சத்து 52 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது வரை வினாடிக்கு ஒரு லட்சத்து 55 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது. ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பரிசல் இயக்கவும் அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குறிக்கவும் மாவட்ட நிர்வாகம் 13-வது நாளாக தொடர்ந்து தடையை நீட்டித்து வருகிறது.


 இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை ஒகேனக்கல் நுழைவு வாயிலான மடம் சோதனை சாவடியில்  நீர்வரத்து அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் சுற்றுலா பயணிகள் வரும் வாகனம் மற்றும் சுற்றுலா பயணிகளை சோதனை சாவடியில் இருந்து திரும்ப அனுப்பி வருகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்


மேலும் சுற்றுலா பயணிகள் கூறும் பொழுது ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பொழுதுபோக்கு இடங்களான முதலைகள் மறுவாழ்வு மையம் வண்ண மீன் காட்சியகம் மற்றும் பறவைகள் பூங்கா என பார்க்க அனுமதி அளித்தால் தொலைவிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடையாமல்  பொழுதுபோக்கு இடங்களை சுற்றி பார்த்து செல்வோம் என கோரிக்கை வைத்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad