சேலம் மாவட்ட ஆவணகாப்பகத்தின் அதிகார வரம்புகுட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களிலிருந்து தனியார் வசமுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள் சேலம் மாவட்ட ஆவணகாப்பகத்தில் சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே தருமபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தனியார் வசமுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை தருமபுரி மாவட்ட நிர்வாகத்திற்கு நன்கொடையாக வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் ரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக