தருமபுரி மாவட்டம் மதிகோண்பாளையம் காவல் நிலையத்திற்குட்பட்ட எம். ஒட்டப்பட்டி பகுதியில் 1998ம் ஆண்டு முதல் ஒட்டஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் இடமானது பெருமாள் என்பவர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு தானமாக வழங்கி உள்ளார்.
அதனையடுத்து மதிகோண்பாளையம் காவல் துறையினர் மணியை அழைத்து சமதானம் செய்து அனுப்பியுள்ளனர். இந்நிலையில் நேற்று மதியம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சென்ற மணி என்பவர் இன்னும் நீங்கள் காலி செய்யவில்லையா என அலுலலக ஊழியர் அருள் என்பவரை திருப்புளியால் தாக்கியுள்ளார்.
உடனடியாக அருள் என்பவர் அவரை தள்ளி விட்டு வெளியே சென்றதையடுத்து அருகே இருந்தவர்களும் மணியை தடுக்க முற்பட்ட போது அவர்களையும் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து தாக்கி உள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் இருந்தவர்களும் மணியை தாக்கியுள்ளனர்.
இதனால் அலுவலக ஊழியர் உட்பட நான்கு பேருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதிகோண்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மணி என்பவரும் அலுவலக ஊழியர்கள் என்னை தாக்கியதாக புகார் அளித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக