TNPSC Group I தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 11 ஜூலை, 2024

TNPSC Group I தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.


தருமபுரி மாவட்டத்தில் எதிர்வரும் 13.07.2024 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி -1 (Group-I) தேர்வுகள் நடைபெறுவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.

தருமபுரி மாவட்டத்தில் எதிர்வரும் 13.07.2024 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி -1 (Group-I) தேர்வுகள் நடைபெறுவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில்தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் இன்று (11.07.2024) நடைபெற்றது.


இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்ததாவது: தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு- Group-I பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு வருகின்ற 13.07.2024 (சனிக்கிழமை) முற்பகல் மட்டும் தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 25 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. இதில் சுமார் 8314 தேர்வர்கள் தேர்வு எழுதவிருக்கின்றனர்.


தேர்வு மையங்களில் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் செய்யப்பட்டுள்ளன. அனைத்து தேர்வு மையங்களிலும் பேருந்துகள் நின்று செல்லும் வகையிலும், சிறப்பு பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு மையத்திற்கு செல்லவும், கடைசிநேர அலைச்சல்களை தவிர்க்குமாறும், தேர்வாணைய விதிமுறைகளை முழுமையாக படித்து கடைபிடிக்குமாறும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


மேலும், தேர்வர்களின் அனுமதிச் சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு தேர்வர்கள் தேர்வு நாளான 13.07.2024 அன்று காலை 8.30 மணி முதல் 9.00 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். தாமதமாக வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டு தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டாது. எனவே தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திற்கு உரிய நேரத்திற்குள் செல்லுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்.


இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) திரு.ஐ.சையது முகைதீன் இப்ராகிம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

கருத்துகள் இல்லை:

Post Top Ad