பாலக்கோட்டில் திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ தலைமையில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 அக்டோபர், 2024

பாலக்கோட்டில் திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ தலைமையில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்துநிலையம் முன்பு அதிமுக சார்பில் திமுக அரசின் விலைவாசி உயர்வு, போதைப் பொருள் புழக்கத்தை தவிர்க்க தவறிய திமுக அரசை கண்டித்தும் மற்றும் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.


இந்தப் போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர், மாவட்ட செயலாளர், கே.பி.அன்பழகன் எம்.எல். ஏ  தலைமை தாங்கினார், மாவட்ட அவைத் தலைவர் தொ.மு. நாகராசன், ஒன்றிய செயலாளர்கள் கோபால், வக்கில் செந்தில், நகர செயலாளர் ராஜா ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தின் போது விடியா திமுக அரசை கண்டித்தும், மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கும் ஸ்டாலின் அரசை கண்டித்தும், விலைவாசி உயர்வை தடுக்க தவறிய திமுகஅரசை  கண்டித்தும், போதைப் பொருள் புழக்கம், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பள்ளி கல்லூரி மாணவர்களிடையே அதிக அளவில் பரவி வரும் போதைப்பொருள் கலாசாரம்,  ரியல்எஸ்டேட் மாபியா,  பத்திரப்பதிவு கட்டண உயர்வு உள்ளிட்ட மக்களை வாட்டி வதைக்கும் பல்வேறு பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல், குடும்ப அரசியலை நடத்தி கொண்டு,  உல்லாச உலக சுற்றுலா சென்று வரும் திமுக அரசின் பொம்மை முதல்வர் ஸ்டாலினை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கழக தெண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad