ஏழ்மையில் இறந்த மூதாட்டி உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமரர் சேவை அமைப்பினர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 12 அக்டோபர், 2024

ஏழ்மையில் இறந்த மூதாட்டி உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமரர் சேவை அமைப்பினர்.

திருச்சி மாவட்டம் லால்குடி பெரிய செட்டி தெருவில் திருமலை வீரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி காளியம்மாள், இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மிகவும் ஏழ்மையில் இருந்த இவர்கள் காளியம்மாளின் மருத்துவ சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இன்று சிகிச்சை பலனின்றி இறந்த இவரது உடலை நல்லடக்கம் செய்ய முடியாமல் தவித்து வந்தனர். இந்த தகவல் மை தருமபுரி அமரர் சேவையினருக்கு கிடைத்தது, உடனடியாக அவர்களை தொடர்பு கொண்டு தேவையான தகவல்கள் மற்றும் எழுத்துப்பூர்வமான கடிதத்தை அவரது கணவர் மூலம் பெற்றுக்கொண்டு தருமபுரி நகராட்சி பச்சையம்மன் மயானத்தில் அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்யப்பட்டார். 


மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 111 புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளோம், இதில் ஏழ்மையில் இறந்தவர்களில் 7 புனித உடல்கள் நல்லடக்கம் செய்துள்ளனர், இந்த நிகழ்வில் மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், மருத்துவர் முஹம்மத் ஜாபர் இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்ய உதவினர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad