தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதி வண்டி வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமணன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வக்கில் ஆ.மணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பதினொன்றாம் வகுப்பு படிக்கும் 211 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டியினை வழங்கி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் திமுக மாநில விவசாய அணி துணைத் தலைவர் சூடப்பட்டிசுப்ரமணி, ஒன்றிய துணை செயலாளர் ரவி, மீனவர் அணி துணை அமைப்பாளர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் அழகு சிங்கம், பேரூராட்சி துணைத் தலைவர் தாஹசீனாஇதாயத்துல்லா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜீவாகிருஷ்ணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் மோகன், ரூஹித், ஆசிரியர் லட்சுமணன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பிணர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக