ஆதரவற்று இறந்த பெண்ணின் உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமரர் சேவை அமைப்பினர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 18 அக்டோபர், 2024

ஆதரவற்று இறந்த பெண்ணின் உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமரர் சேவை அமைப்பினர்.

ஓசூர் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பேகேப்பள்ளி பாகூர் சாலையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி அந்த பெண் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்துள்ளார். அவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி காவல்துறையினர் அனுப்பிவைத்தனர், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்,  அவரை பற்றி காவல்துறையினர் விசாரித்ததில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. 


எனவே ஓசூர் போக்குவரத்து காவலர் ராம்குமார், மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், சண்முகம், செந்தில், ஜெய் சூர்யா ஆகியோர் அவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 114 புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

Post Top Ad