பெரியூர் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை !!! - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 18 அக்டோபர், 2024

பெரியூர் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை !!!


பாலக்கோடு சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் புலிகரை அரசு மேல் நிலைப் பள்ளியில் நடைப்பெற்றது. அதில் பெரியூர் அரசு உயர் நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், TENNIKOIT, TABLE TENNIS, LAWN TENNIS போன்ற பல்வேறு போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பெற்று சாதனை செய்துள்ளனர்.


TENNIKOIT (வளைய பந்து) போட்டியில் 14-வயதிற்கு உட்பட்ட மாணவிகள் ஒற்றையர் பிரிவில் முதல் இடத்தையும், இரட்டையர் பிரிவில்: முதல் இடத்தையும், 14-வயதிற்கு உட்பட்ட மாணவர்கள், இரட்டையர் பிரிவில் முதலிடத்தையும் பெற்றனர்.


TABLE TENNIS போட்டியில் 14-வயதிற்கு உட்பட்ட மாணவிகள் ஒற்றையர் பிரிவில்  முதலிடத்தையும் 14-வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் இரட்டையர் பிரிவில், முதலிடத்தையும்,19-வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் இரட்டையர் பிரிவில் - முதலிடத்தையும் 14-வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் ஒற்றையர் பிரிவில், இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.


14, 17 & 19 அனைத்து பெண்கள் பிரிவிலும் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர். மேலும் பென்னாகரம் வட்டார அளவிலான சதுரங்க போட்டியில் 17 வயதுக்குட்பட்ட பெண்கள்  பிரிவில் முதலிடத்தையும் மற்றும் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.


வெற்றிபெற்ற அனைவரும் மாவட்ட அளவிளான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளையும், இவ் வெற்றிக்கு உறுதுனையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர்கள் திரு. G.அர்ஜுனன் மற்றும் திருமதி. P.மதியழகி ஆகியோரை பள்ளியின் தலைமையாசிரியர் திரு. S.வெங்கடேசன் அவர்கள், மற்றும் அனத்து ஆசிரியர்களும்  பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad