தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டியில் காங்கிரஸ் சார்பில் காந்தி ஜெயந்தி, சாஸ்திரி பிறந்தநாள், காமராஜர் நினைவு நாள் பாதயாத்திரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தீர்த்த ராமன் தலைமையில் நடைபெற்றது.
இப்பேரணிக்கு பென்னாகரம் வட்டார தலைவர் சண்முகம், ஏரியூர் வட்டாரத் தலைவர் பெரியசாமி, பென்னாகரம் நகரத் தலைவர் சுப்பிரமணி, பாப்பாரப்பட்டி நகரத் தலைவர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த பேரணியானது கீழ் பேருந்து நிலையத்திலிருந்து முக்கிய கடைவீதி வழியாக சிவா மணிமண்டபம் வரை கையில் கொடிகளை ஏந்தியவாறு வேரறுப்போம்! வேரறுப்போம்! ஆர்.எஸ்.எஸ்யை வேரறுப்போம், முடிவு கட்டுவோம் !முடிவு கட்டுவோம்! பி.ஜே.பியின் வெறுப்பு அரசியலுக்கு முடிவு கட்டுவோம் என கோஷங்களை எழுப்பியவாறு பேரணியானது நடைபெற்றது.
சிவா மணிமண்டபத்தில் முடிவடைந்த பேரணி அதன் பின்னர் மாலை அணிவித்து வணங்கினர் .இதில் கட்சியின் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் தொண்டர்கள் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக