நாட்டு நலப்பணி திட்டத்தில் யோகா கலை ஆளுமை திறன் பயிற்சி நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 அக்டோபர், 2024

நாட்டு நலப்பணி திட்டத்தில் யோகா கலை ஆளுமை திறன் பயிற்சி நடைபெற்றது.

அரூர் மற்றும் பொ. மல்லாபுரம் ஆகிய இரு பள்ளிகளிலும் நாட்டு நலப்பணி திட்ட முகாம் கடந்த ஒரு வாரமாக நடந்து கொண்டது நேற்றைய நிகழ்வில் யோகா கலை, சிரிப்பு கலை, ஆளுமை திறன் பயிற்சி உடற்கல்வி ஆசிரியர் ப. பழனிதுரை நல்லாசிரியர் அவர்கள் வழங்கினார். பொ.மல்லாபுரம் தலைமையாசிரியர் பாலமுருகன், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் தலைமையில் நல்லாஆசிரியர் பழனி துரை யோகா பயிற்சி சிரிப்பு கலை பயிற்சி ஆளுமை திறன் பயிற்சி போதை பொருள் விழிப்புணர்வு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. 


தேசிய நாட்டு நலப் பணி திட்டம் அரூர் அரசுபள்ளி 25 மாணவர்களுக்கும் பொ .மல்லாபுரத்தில் 50 மாணவர்களும் கலந்து கொண்டனர் இதில் நத்தமேடு மாணவர்கள் 25 பேர் கலந்து கொண்டனர் சிறப்பாக யோக பயிற்சி  வழங்கிய நல்லாசிரியர் பழனிதுரை அவர்களுக்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ் தென்றல் நல்லாசிரியர் பொன்னாடை போற்றி நினைவு பரிசு வழங்கினார் சிறப்பாக யோகா பயிற்சி சிரிப்பு கலை பயிற்சி செய்த மாணவர்களுக்கு பழனி துரை  நல்ல சிறிய சிறப்பு பரிசு வழங்கினார். விழிப்புணர் நிகழ்ச்சியில் மாணவர்கள் நன்றிவுரை வழங்க விழா இனிதே சிறப்பாக நிறைவு பெற்றது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad