ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 அக்டோபர், 2024

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.


காவேரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சில தினங்களாக நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது இந்நிலையில் காவேரி கரையோரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் இன்று தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு 18000 கனஅடியாக மீண்டும் அதிகரித்துள்ளது.


இந்த நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்து அருவி, சினி அருவி, மெயின் அருவி ஆகிய அருவிகள் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில்  குளிக்கவும் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 10வது நாளாக நீடித்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad