அதகப்பாடி அரசு நடுநிலைப்பள்ளி சிறப்பு வாக்காளர் பட்டியல் முகாமை கலெக்டர் சாந்தி பார்வையிட்டார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 24 நவம்பர், 2024

அதகப்பாடி அரசு நடுநிலைப்பள்ளி சிறப்பு வாக்காளர் பட்டியல் முகாமை கலெக்டர் சாந்தி பார்வையிட்டார்.


1.1.2025 தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு தமிழகத்திலுள்ள வாக்களர் பட்டியல்கள் திருத்தம் செய்திட வரைவு வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டுள்ளது. வருகிற 28-ந் தேதி வரை புதிய வாக்காளர்களைச் சேர்க்கவும், பெயர்கள் நீக்கவும், திருத்தம் செய்யவும் மனுச் செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

இந்த நாட்களில் விடுபட்ட வாக்காளர்களும், இடம் மாறிய வாக்காளர்களும், 1.1.2025 அன்று 18 வயது நிரம்பக்கூடிய புதிய வாக்காளர்களும் தங்கள் பெயர்களை சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்வதற்கான படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து, அந்தப் படிவங்களை அந்தந்த முகாம்களில் கொடுக்க வேண்டும். இதனடிப்படையில் 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாத பெயர்களையும், புதிதாக குடிபெயர்ந்து உள்ள வாக்காளர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், இதில் அதாகப்படி ஊராட்சி நடுநிலைப்பள்ளி   வாக்காளர் பட்டியல் முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி அவர்கள் பார்வையிட்டனர் உடன் வட்டாட்சியர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad