இந்நிகழ்ச்சிக்கு பாலக்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அரியப்பன், திமுக மேற்கு மாவட்ட பொருளாளர் முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் பி.கே.முரளி அவர்கள் 10, 11 மற்றும் 12 ம் வகுப்பு பயின்று வரும் 965 மாணவிகளுக்கு எழுதுபொருள் அடங்கிய தொகுப்பினை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பேரூர் கழக அவைத் தலைவர் அமானுல்லா, முன்னாள் சேர்மன் நாகராஜ், பேரூர் கழக துணை செயலாளர்கள் பாபு, மாதேஷ், மாவட்ட பிரதிநிதி மோகன், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் சந்தர், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் குமரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப துணை அமைப்பாளர் ஆனந்த், தகவல் தொழில்நுட்ப தொகுதி பொறுப்பாளர் லேகேஸ்வரி, மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் அருள், நகர ஒருங்கினைப்பாளர் தமிழரசன், ஒன்றிய பிரதிநிதிகள் பெரியசாமி, வகாப்ஜான், இலியாஸ், ஏஜாஸ், வார்டு கவுன்சிலர்கள், கிளை செயலாளர்கள் சார்பு அணி அமைப்பாளர்கள், நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக