கோபிநாதம்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட தென்கரைக்கோட்டையில் ஒரு பெட்டிக்கடை மற்றும் வடகரையில் ஒர் பெட்டி கடை என இரண்டு கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் காவல் துறையினர் கண்டெடுத்து பறிமுதல் செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிந்து மேற்நடவடிக்கைக்காக உணவு பாதுகாப்பு துறைக்கு பரிந்துரை அடிப்படையில் மேற்கண்ட இரண்டு கடை உரிமையாளர்களுக்கு உடனடி அபராதம் தலா ரூபாய்.25000 மற்றும் 15 தினங்கள் கடை இயங்க தடை விதித்தும் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, அவர்கள் உத்தரவிட்டார்.
அதனை காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் கோபிநாதம்பட்டி காவல் நிலைய சிறப்பு நிலை உதவி ஆய்வாளர் பிரகாசம் இணைந்து கடை இயங்க தடை உத்தரவு நகல் மற்றும் ரூபாய்.25000 அபராதம் தெரிவித்து மறு உத்தரவு வரும் வரை கடை திறக்க கூடாது எச்சரித்து கடை மூட செய்தனர்.
மேலும் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர் இராமியம்பட்டி மற்றும் சிந்தல்பாடி பகுதிகளில் உள்ள உணவகங்கள், பேக்கரிகள், மீன் இறைச்சி கடைகள் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை மாணவியர் விடுதி உள்ளிட்டவற்றில் ஆய்வு செய்த போது இராமியம்பட்டியில் ஒரு மீன் இறைச்சி வருவல் கடையில் குளிர் பதன பெட்டியில் இருப்பு வைத்திருந்த நாள் பட்ட மீன்இறைச்சி, உரிய விபரங்கள் இல்லாத கார்ன் பிளார் மாவு பாக்கெட் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தப்பட்டது.
அருகில் ஒரு உணவகத்தில் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி கவர்களில் உணவு பார்சல் கண்டு பறிமுதல் செய்து அப்புறப்படுத்தப்பட்டது. மேற்படி இரண்டு கடைகளுக்கும் மாவட்ட நியமன அலுவலர் உத்தரவு படி முறையே ரூபாய்.1000 மற்றும் ரூபாய். 2000 உடனடி அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக