ஆய்வில் பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி மற்றும் காரிமங்கலத்தில் மொரப்பூர் ரோடு, உள்ளிட்டவற்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி கவர்கள், கேரி பேக்குகள் பறிமுதல் செய்யப்பட்ட தாபா உள்ளிட்ட மூன்று உணவகங்கள் உரிமையாளர்களுக்கு தலா ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டது.
தர்மபுரி சாலையில் ஒர் உணவகம் மற்றும் பாலக்கோடு செல்லும் சாலையில் ஒரு உணவகத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி கவர்களில் சாம்பார் பார்சல் கண்டு நெகிழி கவர்கள் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தப்பட்டது. மேற்படி உணவக உரிமையாளர்களுக்கும் நியமன அலுவலர் உத்தரவின் பேரில் உடனடி அபராதம் தலா ரூ.2000 விதிக்கப்பட்டது. ஆய்வில் பானி பூரி கடைகளும் கண்காணிக்கப்பட்டது முதல் முறை என்பதால் கவர்கள் பறிமுதலுடன் விழிப்புணர்வு செய்து எச்சரித்து நோட்டீஸ் செய்யப்பட்டது.
இது சார்ந்து தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் ஆய்வுகள் தொடர உத்தரவிட்டுள்ளதாகவும் நெகிழி கவர்கள், சில்வர் பேப்பர் பறிமுதல் செய்யப்பட்டால் மேற்படி கடை உரிமையாளர்களுக்கு உடனடி அபராதம் ரூ.2000 விதித்து, தடை செய்யப்பட்ட நெகிழிகள், சில்வர் பேப்பர்கள் அபாயம் குறித்து விழிப்புணர்வு செய்யவும், விற்பனை செய்யும் கடை மொத்த விற்பனையாளர் விவரம் கண்டறிந்து அந்த கடை உரிமையாளர் மேல் கடும் நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்ய ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட நியமன அலுவலர் தெரிவித்தார்.
காரிமங்கலம் பாலக்கோடு சாலையில் ரம்யா திரையரங்கு எதிரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கண்டெடுத்து பறிமுதல் செய்யப்பட்டு காரிமங்கலம் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிந்து பரிந்துரை செய்த ஒரு மளிகை கடைக்கு மாவட்ட நியமன அலுவலர் உத்தரவின் பேரில் ரூ.25000 அபராதம் விதித்து 15 தினங்கள் கடை இயங்க தடை விதித்து நோட்டீஸ் வழங்கி கடை மூடப்பட்டது. நிகழ்வில் காரிமங்கலம் காவல் நிலைய முதல்நிலை காவலர் முத்து உடன் இருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக