இந்த நிலையில் பையர்நத்தம் பகுதியில் இடமாற்றம் செய்யப்படும் அரசு மதுபானகடை பொம்மிடி அருகே உள்ள சாலைவலசுகோட்டைமேடு என்ற இடத்தை அதிகாரிகள் தேர்வு செய்து கடை வைப்பதாக அப்பகுதி மக்களுக்கு செய்தி பரவியது, இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுடன் 50க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென இன்று காலை டாஸ்மாக் கடை அமைக்க இருப்பதாக கூறப்படும் கடை முன்பு திரண்டு எதிர்ப்பு தெரிவிக்க துவங்கினர், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொம்மிடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் விக்னேஷ் தலைமையிலான காவல்துறையினர் இப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.
மேலும் வருவாய்த்துறை, டாஸ்மார்க் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர், அப்போது எக்காரணத்தை கொண்டும் இந்த பகுதியில் அரசு மதுபான கடை திறக்க கூடாது, இப்பகுதியில் உள்ள மக்களின் நிம்மதி கேட்டு விடும் ஆகவே அரசு மதுபான கடை இங்கே வர வேண்டாம் என கோஷம் எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக