பாலக்கோடு அடுத்த மோதுகுலஅள்ளி ரெயில்வே தண்டவாளத்தில், அமர்ந்து பொதுமக்கள் தர்ணா - 4 கிராம மக்களின் போக்குவரத்து பாதிப்பால் பொதுமக்கள் அவதி - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 டிசம்பர், 2024

பாலக்கோடு அடுத்த மோதுகுலஅள்ளி ரெயில்வே தண்டவாளத்தில், அமர்ந்து பொதுமக்கள் தர்ணா - 4 கிராம மக்களின் போக்குவரத்து பாதிப்பால் பொதுமக்கள் அவதி


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மோதுகுல அள்ளி கிராமத்தில் ரெயில்வே கேட் அமைக்கப்பட்டிருந்தது, இதன் வழியாக கரகதஅள்ளி, மோதுகுலஅள்ளி, காட்டம்பட்டி, சோமனஅள்ளி, உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்க்கும், விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகள், கரும்பு, மரவள்ளி கிழங்குகள் உள்ளிட்ட விவசாய பொருட்களை கொண்டு செல்வதற்க்கும் பிராதன வழி இந்த ரெயில்வே கேட் பாதை ஆகும்.


இந்த ரயில்வே கேட்டை ரயில்வே நிர்வாகம் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மூடிவிட்டு அப்பகுதியில் தரைப்பாலம் அமைத்தனர். அவசரகதியில் அமைக்கப்பட்ட தரைப்பாலத்திற்க்கு அப்போதே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதனை கண்டுகொள்ளாத ரயில்வே நிர்வாகம் பிடிவாதமாக தரைப்பாலத்தை அமைத்தனர்.


இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் தரைப்பாலத்தில் 10 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியது, தேங்கிய நீர் வெளியேற வழி இல்லாமல் உள்ளதால், அவ்வழியாக பொதுமக்கள் யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


இது குறித்து அப்பகுதியினர் ரயில்வே நிர்வாகத்திற்க்கு தகவல் அளித்தும் கண்டுகொள்ளாததால் ஆத்திரமடைந்த 100க்கு மேற்பட்ட பொதுமக்கள் மோதுகுலஅள்ளி ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.


தகவலறிந்த பாலக்கோடு டி.எஸ்பி.மனோகரன், தாசில்தார் ரஜினி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா, ரேணுகா ஆகியோர் சம்பவ இடத்திற்க்கு சென்று மழைநீரை வெளியேற்றி போக்குவரத்திற்க்கு வழி செய்வதாக கூறியதையடுத்து பொதுமக்கள் தர்ணாவை கைவிட்டனர்.


ஆனால் நிரந்தர தீர்வு வேண்டும் என்றும் நீரை வெளியேற்ற  மழை காலங்களில் தினமும் போராட முடியாது எனவும், உடனடியாக பழைய ரயில்வே கேட்டை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad