தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ புதூர் மாரியம்மன் கோவில் திருவிழா பாரம்பரிய முறைப்படி, ஒவ்வொரு வருடமும் மாசிமாதம், பெளர்ணமியை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம், இந்த ஆண்டு வரும் பிப்ரவரி மாதம் 10ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை கோயில் திருவிழா நடைப்பெறுவதையொட்டி ஸ்ரீ புதூர் மாரியம்மன் கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை பாரம்பரிய முறைப்படி பூஜை செய்து பந்தக்கால் நட்டு கொடியேற்றி விழாவினை ஊர் கவுண்டர் முருகேசன் துவக்கி வைத்தார்.
முன்னதாக ஸ்ரீ புதூர் மாரியம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் மந்திரி கவுண்டர் பெரியசாமி, பச்சியம்மன் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் பெருமாள், துணை தலைவர் முத்துராஜ், செயலாளர் சித்ரா, பொருளாளர் ரவி, நிர்வாகிகள் முனியப்பன், கோவிந்தராஜ் ஊர்கவுண்டர்கள், மந்திரிகவுண்டர்கள், மற்றும், வெற்றிலை வியபாரிகள் சங்கத்தினர், பச்சியம்மன் இளைஞர் நற்பணி மன்றத்தினர், மங்கள கணபதி வினாயகர் நற்பணி மன்றத்தினர், 6 கோம்பு பங்காளிகள், ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக