பாலக்கோடு திமுக மத்திய ஒன்றிய அலுவலகத்தில் தொகுதி பார்வையாளர் வருகை குறித்து ஆலோசனைக்கூட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 23 ஜனவரி, 2025

பாலக்கோடு திமுக மத்திய ஒன்றிய அலுவலகத்தில் தொகுதி பார்வையாளர் வருகை குறித்து ஆலோசனைக்கூட்டம்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு திமுக மத்திய ஒன்றிய அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களின்  ஆலோசனையின் படியும், மாவட்ட செயலாளர் முன்னாள் உயர்கல்வித் துறை  அமைச்சர் பழனியப்பன்   அவர்களின் வழிகாட்டுதலின்படி, தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர் மணி அவர்களின் அறிவுறுத்தலின் படி தொகுதி பார்வையாளர் வருகை குறித்து ஆலோசனைக்கூட்டம் மத்திய ஒன்றிய செயலாளர் முனியப்பன் தலைமையில் நடைபெற்றது.


இக் கூட்த்திற்க்கு முன்னாள் ஒன்றிய குழு தலைவர் நாகராசன்,  ஒன்றிய அவைதலைவர் ராஜாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் பாலக்கோடு தொகுதி பார்வையாளர் வாக்குசாவடி நிலை முகவர்கள் சரிபார்பு பணி மேற்கொள்ள இருப்பதால் அது குறித்து, ஊராட்சி பொறுப்பாளார்களுடன்  ஆலோசிக்கப்பட்டது.

 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆனந்தன், ஒன்றிய துணை செயலாளர்கள் ரவி, செந்தில்குமார், ஒன்றிய பொருளாளர் குமார், சுற்றுசூழல் அணி மாவட்ட தலைவர் செழியன், மாவட்ட பிரதிநிதி மணி முன்னாள் கவுன்சிலர் சக்திவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும்  தொண்டர்கள் கலந்து கொண்டானர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad