பாலக்கோட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 29 ஜனவரி, 2025

பாலக்கோட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டார வளமையத்தில் பள்ளி கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.இந்த முகாமை தர்மபுரி மாவட்ட உதவி திட்ட அலுவலர் மஞ்சுளா தொடங்கி வைத்தார்.


இந்த முகாமில் 0 முதல் 18 வயது உடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச மருத்துவ மதிப்பீட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த முகாமில் 86க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் மருத்துவக் குழுவினரின் மருத்துவ பரிசோதனை  அடிப்படையில் முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு 27அடையாள அட்டை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 7 மாணவர்களுக்கு உபகரணம் வழங்க பரிந்துரை செய்யப்பட்டது.


இந்த நிகழ்வில்வட்டார கல்வி அலுவலர்கள் தங்கவேல், அன்பு வளவன், சுப்பிரமணி வட்டார மேற்பார்வையாளர் சுகுணா மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் வட்டார ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் சிறப்பு பயிற்றுநர்கள் இயன்முறை மருத்துவர்கள் உள்ளடக்கிய கல்விப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad