பென்னாகரத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 24 ஜனவரி, 2025

பென்னாகரத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம்.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டார வளமையத்தில் பள்ளி கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.இந்த முகாமை தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா தொடங்கி வைத்தார்.இந்த முகாமில் 0 முதல் 18 வயது உடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச மருத்துவ மதிப்பீட்டு பரிசோதனை நடத்தப்பட்டது.


இந்த முகாமில் 80க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும்மருத்துவக் குழுவினரின் மருத்துவ பரிசோதனை  அடிப்படையில் முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து 81 மாணவர்களுக்கு உபகரணம் வழங்க பரிந்துரை செய்யப்பட்டது.


இந்த நிகழ்வில்வட்டார கல்வி அலுவலர்கள் மணிகிருஷ்ணன், துளசிராமன், ஜெகன் வட்டார மேற்பார்வையாளர் மகேஷ் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் மற்றும்ஆசிரியர் பயிற்றுநர்கள் சிறப்பு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad