மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி பழனிசாமி தலைமையில் குட்ட கோசம் பள்ளம் பகுதியில் ஆழ்துளை கிணறுகளில் கைப்பம்பு மற்றும் சிறு மின்விசை பம்பு அமைத்து குடிநீர் தொட்டிகளில் நீரேற்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும், பூதிநத்தம் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் பொதுக்கிணறு மற்றும் போர்வெல் ஆகியவற்றிலிருந்து நீரேற்றி தினசரி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும், பெரியூர் புதூர் மற்றும் புதூர் மேடு பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டிகளில் நீரேற்றி தினசரி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும், குட்டகோசம் பள்ளம் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள குடியிருப்பு பகுதி அருகில் தெரு விளக்கு வசதி செய்து தர வேண்டும், புதூர் பஸ் நிறுத்தம் அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.
பென்னாகரம் துணை வட்ட வளர்ச்சி அலுவலர் சங்கீதாவிடம் கிராம மக்கள் சார்பில் மனு கொடுத்த போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.விஸ்வநாதன், பகுதி குழு உறுப்பினர் சண்முகம், பழனிச்சாமி கோவிந்தராஜ் மற்றும் கிராம மக்கள் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக